Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா இருந்தா வீட்ல இருக்கக் கூடாது! – சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (11:42 IST)
கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த வேண்டாம் என சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் இருந்து வரும் நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகின்றன. ஒரு தெருவில் மூன்றுக்கும் அதிகமானோருக்கு தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டால் அந்த தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. தற்போது 110 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளன.

இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு 180 முதல் 220 வரை இருந்து வருகிறது. கொரோனா கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை என்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் இனி கொரோனா தொற்று உறுதியானால் அவர்களை நேரடியாக மருத்துவமனையில் அனுமதிக்கவும், தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி சம்பந்தப்பட்டவர் வீட்டில் உள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னர் அவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments