Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா இருந்தா வீட்ல இருக்கக் கூடாது! – சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (11:42 IST)
கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த வேண்டாம் என சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் இருந்து வரும் நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகின்றன. ஒரு தெருவில் மூன்றுக்கும் அதிகமானோருக்கு தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டால் அந்த தெரு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. தற்போது 110 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளன.

இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு 180 முதல் 220 வரை இருந்து வருகிறது. கொரோனா கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை என்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் இனி கொரோனா தொற்று உறுதியானால் அவர்களை நேரடியாக மருத்துவமனையில் அனுமதிக்கவும், தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி சம்பந்தப்பட்டவர் வீட்டில் உள்ளதா என்பதை ஆராய்ந்த பின்னர் அவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மேலும் 24 பேர் கவலைக்கிடம்..! தமிழக அரசு அதிர்ச்சி தகவல்..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.! தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்...!!

மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இங்கே இல்லையா? தங்கர்பச்சான்

வெறும் தேர்தல் அரசியல் நடத்தும் திமுக..! முதல்வர் ஏன் வரவில்லை.? பிரேமலதா சரமாரி கேள்வி..!!

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments