Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா உணவகத்தில் சப்பாத்தி இனி கிடையாதா? – சென்னை மாநகராட்சி விளக்கம்!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (10:48 IST)
சென்னையில் அம்மா உணவகங்கள் சிலவற்றில் இரவு நேரத்தில் சப்பாத்தி வழங்குவது நிறுத்தப்பட்டது குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்கள் தரமான உணவை மலிவு விலையில் பெறும் வகையில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 403 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் சிலவற்றில் சமீப காலமாக இரவு நேரத்தில் சப்பாத்திக்கு பதிலாக தக்காளி சாதம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் சப்பாத்தி வழங்குவது நிறுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்த நிலையில் விளக்கமளித்துள்ள சென்னை மாநகராட்சி, அம்மா உணவகங்களில் சப்பாத்தி செய்ய தேவையான கோதுமை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் வாங்கப்பட்டு தனியார் ஆலைகளில் அரைக்கப்படுகிறது. சமீபத்தில் தனியார் ஆலை ஒன்றில் ஏற்பட்ட இயந்திட கோளாறு காரணமாக சென்னையில் உள்ள ஒரு சில அம்மா உணவகங்களில் மட்டும் சப்பாத்தி வழங்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் அதற்கு மாற்றாக தக்காளி சாதம் வழங்கப்பட்டது. விரைவில் மீண்டும் விரைவில் சப்பாத்தி வழங்கப்படும் என விளக்கமளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments