Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டு தினத்தில் கூட்டம் கூடினால் அபராதம்: சென்னை மாநகராட்சி ஆணையர்

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (11:04 IST)
புத்தாண்டு தினத்தில் சென்னையில் கூட்டம் கூடினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
நாளை மறுநாள் உலகம் முழுவதும் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுவதை அடுத்து சென்னையில் புத்தாண்டு தினம் கொண்டாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
 
குறிப்பாக மெரினா கடற்கரை உள்பட எந்த கடற்கரையிலும் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என்றும் இரவு 12 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கூட்டம் கூடினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சந்தீப் சிங் பேடி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
மேலும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதால் தனிமனித இடைவெளியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயதுக்கு உட்பட்டவர்கள் யூடியூப் பயன்படுத்த தடை.. உலகில் முதல்முறையாக நிறைவேற்றப்படும் மசோதா..!

இந்தியாவுக்கு 25% வரி என டிரம்ப் மிரட்டல் எதிரொலி.. படுவேகமாக சரியும் பங்குச்சந்தை..!

கையெழுத்து சரியில்லை என 3ஆம் வகுப்பு மாணவருக்கு சூடு வைத்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments