Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்களை தாக்கும் மாடுகள்! 3 ஆயிரம் மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (16:15 IST)
சமீப காலமாக சென்னையில் பொதுமக்களை மாடுகள் தாக்கும் சம்பவம் அதிகமானதை தொடர்ந்து இதுவரை 3 ஆயிரம் மாடுகள் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டுள்ளன.



சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் பல அதன் உரிமையாளர்களால் சரியாக பராமரிக்கப்படாமல் சாலைகளில் சுற்றி வருவது அதிகமாக உள்ளது. இதனால் மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதுடன், சில சமயங்களில் பொதுமக்களை தாக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது.

இதனால் சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறாக திரியும் மாடுகளை பிடிக்கவும், அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பல பகுதிகளில் மாடுகள் பிடிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின் படி, இதுவரை பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 3,859 மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

அடுத்த கட்டுரையில்
Show comments