Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா சிகிச்சைக்காக பள்ளிகளை கேட்கிறதா சென்னை மாநகராட்சி? வலுக்கும் எதிர்ப்பு!

Webdunia
சனி, 2 மே 2020 (09:32 IST)
சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கேட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

தமிழகத்திலேயே கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த பகுதியாக சென்னை உள்ளது. அங்கு நேற்று மட்டும் 176 பேருக்குக் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக 1082 பேருக்குக் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கடிதத்தில் சென்னையிலுள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளையும் மே 2ஆம் தேதிக்குள் அரசி்டம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டதாகவும், அந்த பள்ளிகளில் கொரோனா தடுப்பு மையங்களை அமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இதற்கு தனியார் பள்ளி உரிமையாளர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு உருவாகியுள்ளது. உலக சுகாதார மையம் பள்ளி கட்டிடங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக, முகாமங்களாக பயன்படுத்த கூடாது எனக் கூறியிருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடித்து துவைக்கும் வெயில்.. இனி மதியம் வரை மட்டுமே வேலை! - ஒடிசா அரசு அறிவிப்பு!

1 லட்ச ரூபாய் பில்லா? நீங்க கரண்ட் பில் கட்டாம இருந்துட்டு..!? - கங்கனாவை வறுத்தெடுத்த மின்வாரியம்!

அடுத்த பாஜக தமிழக தலைவர் யார்? கூட்டணி யாருடன்? விடிய விடிய ஆலோசனை செய்த அமித்ஷா..!

ஹால் டிக்கெட்டை கவ்வி சென்ற பருந்து.. அரசு வேலை தேர்வு எழுத வந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

அரசு வேலை, ரூ.4 கோடி ரொக்கம், சொந்த வீடு.. வினேஷ் போகத் தேர்வு செய்தது எதை?

அடுத்த கட்டுரையில்
Show comments