Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 45 கி.மீ தூரத்திற்கு மழைநீர் வடிகால்! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (13:16 IST)
சென்னையில் மழைநீர் செல்ல ஏதுவாக 45 கி.மீ தூரத்திற்கு வடிகால் அமைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் தமிழகத்தில் பருவமழை பெய்யும்போதெல்லாம் தலைநகரான சென்னையின் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்குவது தொடர்கதையாகியுள்ளது. முறையாக மழைநீர் வெளியேற வடிகால்கள் இல்லாததே இதற்கு காரணம் என பலரும் கூறி வரும் நிலையில் மழைநீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் 45 கி.மீ தூரத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்க உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. முதற்கட்டமாக தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், கோடம்பாக்கம் மற்றும் அடையாறு உள்ளிட்ட இடங்களில் வடிக்கால்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக ரூ.120 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments