Webdunia - Bharat's app for daily news and videos

Install App

36லிருந்து 57ஆக உயர்ந்த கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்! – மீண்டும் அபாயத்தில் சென்னை

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (13:08 IST)
தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல குறைந்து வந்த நிலையில் தற்போது சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக தமிழகத்தில் கடும் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. பிறகு மெல்ல மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், தலைநகரான சென்னையில் மட்டும் பாதிப்புகள் அதிகமாக இருந்ததால் பொதுமுடக்கம் தொடர்ந்து அமலில் இருந்தது. இதனால் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மெல்ல சென்னையிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டன.

தற்போது சென்னையில் தளர்வுகள் அமலில் உள்ளதால் வெளிமாவட்டத்திலிருந்து பலரும் சென்னைக்கு வர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக சென்னையில் பாதிப்புகள் குறைந்ததால் கட்டுப்பாட்டு பகுதிகளும் குறைக்கப்பட்டு 36 ஆக இருந்தது. இந்நிலையில் மீண்டும் பாதிப்புகள் அதிகரிப்பதால் கட்டுப்பாட்டு பகுதிகள் 36லிருந்து 57 ஆக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments