Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள்.. மின்சார ரயில்கள் ஓடுமா?

Siva
புதன், 12 மார்ச் 2025 (07:51 IST)
சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே மார்ச் 13 மற்றும் 15 ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
 
இதன் காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 25 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும், மூர்மார்க்கெட்டில் இருந்து வருகிற 13 மற்றும் 15 ஆம் தேதிகளில், கும்மிடிப்பூண்டி செல்லும் கீழ்க்கண்ட ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
 
காலை 8:05 மணி
காலை 9:00 மணி
காலை 9:30 மணி
காலை 10:30 மணி
காலை 11:35 மணி
 
அதேபோல் கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட் நோக்கி கீழ்க்கண்ட நேரங்களில் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
 
காலை 9:55 மணி
காலை 11:25 மணி
மதியம் 12:00 மணி
மதியம் 1:00 மணி
மதியம் 2:30 மணி
மாலை 3:15 மணி
 
மேற்கண்ட ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் இதனை கவனத்தில் கொண்டு மாற்று திட்டங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments