Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னோட டார்கெட் சைக்கிள் மட்டும்தான்! – சென்னையில் பிரபல சைக்கிள் திருடன் கைது!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (12:32 IST)
சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக சைக்கிளை குறி வைத்து ஆட்டைய போட்டு வந்த திருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் முக்கிய பகுதிகளான மேற்கு மாம்பலம், அசோக் நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சைக்கிள்கள் மாயமாவது கடந்த சில மாதங்களாக தொடர் கதையாக இருந்து வந்துள்ளது.

அப்பார்ட்மென்ட் வாசிகள் பயன்படுத்தும் உயர்ரக சைக்கிள்களும் தொடர்ந்து திருட்டு போன நிலையில் இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் பெரும்பான்மையான சைக்கிள் திருட்டு கேஸ்களில் ஒரே ஆள் சம்பந்தப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை செய்து வந்த போலீஸார் அப்பகுதியில் சைக்கிள் திருட்டு ஸ்பெஷலிஸ்டாக இருந்த பாபுவை கைது செய்துள்ளனர். தினசரி ஒரு சைக்கிளையாவது திருடிவிடும் பாபு அதை ரூ.2 ஆயிரம் ரூபாய் வரை விற்றுவிட்டு அந்த காசில் மது அருந்துவது, உல்லாசமாக ஊர் சுற்றுவது போன்றவற்றை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிரபல சைக்கிள் திருடன் பிடிபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments