Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை காரணமாக மின்சார, பறக்கும் ரயில்கள் குறைந்த அளவே இயக்கப்படும்

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2015 (14:41 IST)
சென்னையில் பெய்து வரும் அடைமழை காரணமாக சென்னை கடற்கரை ரயில் நிலையதிலிருந்து தாம்பரம் மற்றும் வேளச்சேரி வரையிலான மின்சார ரயில்கள் மற்றும் பறக்கும் ரயில்கள்  மெதுவாக இயக்கப்படும் என்றும் அதே சமயம் குறைந்த அளவே ரயில்கள் இயக்கப்படும் என்றும் மின்சார ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 
 
சென்னையில் கனமழையால், ரயில் தண்டவாளங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்று கண்காணிக்க ரயில்வே ஊழியர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பயணிகளின் வருகை குறைந்து இருப்பதால் குறைந்த அளவே மின்சார ரயில் மற்றும் பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்றும், இதனால் ரயில் சேவை பாதிக்கப்படாது என்றும் தொடர்ந்து ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையில் பெய்து வரும் கனமழையால் ரயில் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments