Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. என்ன காரணம்?

Siva
செவ்வாய், 28 மே 2024 (07:59 IST)
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரும் செல்லும் மின்சார ரயில் இனி சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் முதல் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே சென்னை கடற்கரை முதல் சிங்கப்பெருமாள் கோவில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மின்சார ரயிலை நம்பியே ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வரும் நிலையில் திடீரென மின்சார சேவையை பகுதியாக மாற்றி உள்ளது பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த உடன் மீண்டும் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments