Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் தடம் புரண்டு விபத்து! பயணிகளுக்கு பாதிப்பா?

Webdunia
திங்கள், 15 மே 2023 (16:12 IST)
சென்னை மற்றும் பெங்களூர் இடையே தினமும் இயங்கி வரும் டபுள் டக்கர் ரயில் இன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னை மற்றும் பெங்களூர் இடையே இயங்கி வரும் டபுள் டக்கர் ரயில் முழுக்க முழுக்க ஏசி என்பது மட்டுமின்றி இரண்டு அடுக்கு ரயில் என்பதால் இதில் பயணிகள் மிகுந்த விருப்பத்துடன் பயணம் செய்து வருவார்கள். தினசரி இந்த ரயில் முழு அளவில் பயணிகளுடன் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னையிலிருந்து இன்று காலை பெங்களூர் சென்ற டபுள் டக்கர் ரயில் திடீரென தடம் புரண்டு உபத்துக்குள்ளானது. தமிழ்நாடு கர்நாடக எல்லையில் உள்ள பிசாநத்தம் என்ற இடத்தில் ரயிலின் சீ1 பெட்டி திடீரென தடம் புரண்டது. ஆனால் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 
தடம்புரண்ட பெட்டியை மீண்டும் சரி செய்ய ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக இருப்பதாகவும் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் அந்த பணி முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments