Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.34 கோடி பறிமுதல்!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2016 (12:11 IST)
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.34 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலைய வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.


 


அப்போது சந்தேகத்திற்கு இடமான 5 பேரிடம் சோதனை நடத்தியதில் புதிய ரூபாய் நோட்டுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ரூ.1.34 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் இருப்பதை வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றி அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
இதனை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்ணை வைத்து அவை எந்த வங்கிக் கிளைகளில் இருந்து எடுக்கப்பட்டது என்று விவரத்தை சேகரித்து வருகின்றனர். இதில் பிடிப்பட்டுள்ள 5 பேரிடம் விசாரணை நடத்தியதில் இது ஹவாலா பணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் வங்கி அதிகாரிகள் மற்றும் பலர் சிக்குவார்கள் எனவும் கூறப்படுகிறது.
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments