Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் லஞ்சம்: கையும் களவுமாக பிடிபட்ட போலீஸ் அதிகாரி

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (17:41 IST)
சென்னை அசோக் நகர் காவல் உதவி ஆணையர் வின்சன்ட் ஜெயராஜ் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டதால் கைது செய்யப்பட்டார். இதனால் காவல்துறை அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சென்னையில் உள்ள ஒரு மசாஜ் சென்டர் உரிமையாளர் ஒருவரிடம் அசோக் நகர் காவல் உதவி ஆணையர் வின்சன்ட் ஜெயராஜ் ரூ.50 ஆயிரம் லஞ்சம்  கேட்டதாகவும், இதனையடுத்து அவர்  கொடுத்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மறைந்திருந்து வின்செண்ட் ஜெயராஜ் லஞ்சம் வாங்கியபோது அதிரடியாக கையும் களவுமாக பிடித்தததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து 
அசோக் நகர் காவல் உதவி ஆணையர் வின்சன்ட் ஜெயராஜை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
 
 மேலும் லஞ்சம் பெற்றதாக கைதான அசோக் நகர் காவல் உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜின் பூந்தமல்லி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருவதாகவும், இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments