Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதனை மேல் சாதனை படைக்கும் சென்னை விமான நிலையம்

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (08:39 IST)
சென்னை விமான நிலையத்தில் 76-வது முறையாக  கண்ணாடி நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்ட 2012ம் ஆண்டில் ரூ. 3000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
 
விமான நிலையத்தில் இதுவரை  மேற்கூரைகள் இடிந்து விழுதல். தானியங்கி கண்ணாடி கதவு உடைதல் என 75 முறை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பு சம்பவங்களில் 13 பேர் காயமடைந்து உள்ளனர்.
 
இந்நிலையில் 76-வது முறையாக மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் புறப்பாடு பகுதியில் 4-வது நுழைவுவாயில் அருகே கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சென்னை விமான நிலையத்தில் தொடர்ச்சியாக கண்ணாடி நொறுங்கி விழும் சம்பவம் நடைபெற்று வருவதால் மக்கள் விமான நிலையத்திற்கு செல்வதற்கே பயப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments