Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவன்டா ஃபைன் கட்டுறது? மூன்றரை வயது மகனுக்கு ஹெல்மெட் மாட்டிய தந்தை!

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (12:46 IST)
மூன்றரை வயது மகனுக்கு ஹெல்மெட் மாட்டி அழைத்து சென்ற தந்தையை சென்னை காவல்துறை ஆணையர் பாராட்டியுள்ளார். 
 
சாலையில் செல்லும் போது போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது அவசியமானது என கூறப்பட்டு வந்தது. ஆனால், பெரும்பாலான மக்கள் அதை பின்பற்றாத நிலையில் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் சென்னையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஜனார்த்தனன் என்பவர் தனது மூன்றரை வயது மகனுக்கு ஹெல்மெட் மாட்டி அழைத்து சென்றது வைரலாகி வருகிறது. இதனை பலரும் பாராட்டிய நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதனும் பாராட்டியுள்ளார். 
இது குறித்து அவர் வெளியிட்ட சுற்றறிக்கையில், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது, பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயம் என்ற நடைமுறைக்கு ஜனார்த்தனன் முன்னுதாரணமாக திகழ்கிறார் என குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
ஆனால், சமூக வலைத்தளங்களில் இதற்கு பாராட்டு குவிந்தாலும், நீங்க போட்ற ஃபைனுக்கு பயந்தே ஹெல்மெட் போட்டு போகனும் போல இருக்கு என கமெண்ட் செய்தும் வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments