Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் பாதுகாப்பாக உள்ளது: தமிழக அரசு அறிவிப்பு

செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் பாதுகாப்பாக உள்ளது: தமிழக அரசு அறிவிப்பு
, ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (11:01 IST)
செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் பாதுக்காப்பாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் உடைந்து தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் மூழ்க போவதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


 
 
 
செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தின் உயரம் 24 அடியாகும். அதில் தற்போது 21.95 அடி உயரம் வரை நீர் தேக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்திற்கு நீர் வரவு 3493 கனஅடி. நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 3500 கனஅடி ஆகும். செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கம் தற்போது பாதுகாப்பாக உள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil