Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (03:04 IST)
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரைச் சேர்ந்த ஹேமமாலினி என்பவர் செங்கல்பட்டு அருகே தனியார் கல்லூரி ஒன்றின் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்துள்ளார்.
 
இந்நிலையில், இவர் கல்லூரி விடுதி அறையில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சக மாணவிகள் அளித்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
 
மாணவியின் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments