Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை! – செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்!

Webdunia
புதன், 5 மே 2021 (10:10 IST)
செங்கல்பட்டு மருத்துவமனையில் நோயாளிகள் இறந்த விவகாரத்திற்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 13 பேர் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள செங்கல்பட்டு ஆட்சியர் “செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை. ஆக்ஸிஜன் விநியோகத்தில் இருந்த கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த 13 பேரில் ஒருவர் மட்டுமே கொரோனா நோயாளி” என்று விளக்கமளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments