அந்நிய செலாவணி வழக்கில் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு!

அந்நிய செலாவணி வழக்கில் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (11:12 IST)
டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஒன்று தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
 
கடந்த 1996-ஆம் ஆண்டு சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 
நீண்ட காலமாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதி மலர்மதி முன்னிலையில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவானது. கோடநாடு எஸ்டேட் பங்குகளை போலி நிறுவனம் மூலமாக வாங்கியதாக குற்றச்சாட்டு.
 
இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜரான டிடிவி தினகரன் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து தான் தவறு ஏதும் செய்யவில்லை என்றார். இதனையடுத்து நீதிபதி மலர்மதி வழக்கின் விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments