Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி சென்று திரும்பியதும் மாற்றம்; அமைதி காக்கும் அண்ணாமலை! – என்ன காரணம்?

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (09:46 IST)
அதிமுக – பாஜக கூட்டணி முறிவை தொடர்ந்து டெல்லி சென்று பாஜக தலைமையை சந்தித்து வந்துள்ளார் அண்ணாமலை.



ஆரம்பம் முதலே அண்ணாமலை பேச்சுகளால்தான் அதிமுகவுடன் பாஜக மாநில தலைமைக்கு கசப்புணர்வு ஏற்பட்டது. ஆனால் அதிமுக கூட்டணி முறிவை பாஜகவினர் பலரே ஆதரிக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில்தான் நேற்று டெல்லி சென்று பாஜக தலைமையை சந்தித்து வந்தார் மாநில தலைவர் அண்ணாமலை.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரை கேள்வி எழுப்பியபோது எந்த பதிலும் சொல்லாமல் சென்ற அண்ணாமலை “இரண்டு நாட்களுக்கு எதையாவது எழுதிக் கொள்ளுங்கள்” என சொல்லியுள்ளாராம். இரண்டு நாட்கள் கழித்து அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பயணம் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 நாட்கள் கழித்து முக்கியமான அறிவுப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணாமலையை பதவியை விட்டு நீக்கினால்தான் கூட்டணி தொடரும் என முன்னதாக அதிமுக பிரமுகர்கள் கூறி வந்த நிலையில் அவர்களை சமரசம் செய்ய அண்ணாமலை பதவி நீக்கம் செய்யப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோல, அரசியலில் இல்லாவிட்டால் கவலைப்பட மாட்டேன். விவசாயம் பார்க்க போய் விடுவேன் என அண்ணாமலை பேசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments