ஜெமினி மேம்பாலத்தில் பட்டப்பகலில் நடந்த செயின்பறிப்பு: போலீசார் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2017 (12:50 IST)
எப்போதும் பிசியாக இருக்கும் சென்னையின் முக்கிய பகுதியான ஜெமினி மேம்பாலத்தில் பட்டப்பகலில் இளம்பெண் ஒருவரிடம் செயின்பறிப்பு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 



சென்னை கோபாலபுரம் பகுதியை சேர்ந்த ரயில்வே அதிகாரி முருகன் என்பவரின் மனைவி தனது குழந்தையை பள்ளியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தார். அந்த வாகனம் ஜெமினி மேம்பாலத்தில் வந்தபோது பின்னால் இருசக்கர வாகனம் ஒன்றில் வந்த மர்மநபர்கள் திடீரென அந்த பெண்ணின் வாகனத்தை காலால் எட்டி உதைத்தனர். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த இளம்பெண்ணும் அவரது மகளும் காயம் ஏற்பட்டு வலியால் துடித்தபோது திடீரென அந்த இளம்பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மர்மநபர்கள் மாயமாகினர்.

அமெரிக்க தூதரகம் இருப்பதால் ஜெமினி மேம்பாலத்தில் எப்போதும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும். அவர்கள் முன்னிலையிலேயே பட்டப்பகலில் துணிகர செயின்பறிப்பு சம்பவம் நடந்துள்ளது போலீசார் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கத்தில் பசை செய்ய முடியுமா? ரூ.1.37 கோடி மதிப்புள்ள தங்கப்பசையை பறிமுதல்..!

நேருக்கு நேர் வந்த இரண்டு விமானங்கள்.. ரெக்கைகள்மோதியதால் பரபரப்பு.. மும்பையில் திகில் சம்பவம்..!

தூய்மை காவலர்களுக்கான மதிப்பூதியம் உயர்வு.. தமிழ்நாடு அரசு அரசாணை..!

வழக்கறிஞராக மாறுகிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.. பரபரப்பு தகவல்..!

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது.. 3வது குழந்தையை கொன்ற தந்தை..

அடுத்த கட்டுரையில்
Show comments