Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்துக்கு இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசிகள் வருகை!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (10:00 IST)
தமிழகத்துக்கு இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில் அவசர கால தடுப்பூசிகளாக கோவிஷீல்டு மற்றும் கொவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை என தெரிய வந்துள்ளது.

தமிழகத்துக்கு முதல்கட்டமாக தமிழகத்துக்கு ஏற்கெனவே5 லட்சத்து 36,500 டோஸ் கோவிஷீல்டு, 20 ஆயிரம் டோஸ் கோவேக்ஸின் தடுப்பு மருந்து மத்திய அரசால் அனுப்பப் பட்டது. அதையடுத்து இப்போது இரண்டாம் கட்டமாக  5 லட்சத்து 8,500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments