Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சவுதியில் கை இழந்த தமிழ் பெண்: சுஷ்மா ஸ்வராஜ் மீட்க கனிமொழி கோரிக்கை

சவுதியில் கை இழந்த தமிழ் பெண்: சுஷ்மா ஸ்வராஜ் மீட்க கனிமொழி கோரிக்கை
, வியாழன், 8 அக்டோபர் 2015 (04:17 IST)
சவூதியில் முதலாளி ஒருவரால் கை துண்டிக்கப்பட்ட தமிழகப் பெண் ஒருவரை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீட்க வேண்டும் என திமுக எம்.பி.கனிமொழி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக எம்.பி. கனிமொழி இந்திய வெளியுறுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-
 
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே மூங்கிலேறி கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி(56). இவர், அங்குள்ள ஒரு வீட்டில் பணிப்பெண் வேலைக்கு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சவூதி சென்று பணியாற்றி வருகிறார்.
 
இந்த நிலையில், வெளிநாட்டு பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி சவூதி அரேபிய அதிகாரிகள், அந்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் சென்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, தான் வேலை செய்யும் வீட்டில், அந்த வீட்டு முதலாளி மிகவும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கஸ்தூரி கூறி கதறியுள்ளார்.
 
இனால், அந்த வீட்டு முதலாளி கஸ்தூரியின் வலது கையைக் மிகக் கொடூரமாக வெட்டியுள்ளார். இதன் காரணமாக, ரியாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கஸ்தூரி சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், அவருக்கு மேல்சிக்சை முறையாக செய்யவில்லை என தெரிய வருகிறது.
 
எனவே, அந்தப் பெண்ணை இந்தியாவு்ககு மீட்டுவந்து, அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்க வேண்டும் எனத தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil