பேசிக்கொண்டிருந்தபோது வெடித்து சிதறிய சச்சின் செல்போன்

Webdunia
சனி, 3 ஜூன் 2017 (17:58 IST)
சாலை ஓரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது திடீரென செல்போன் வெடித்து சிதறியதில் படுகாயம் அடைந்த சச்சின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


 

 
அரியலூர் பகுதியைச் சேர்ந்த சச்சின்(28) திருவாரூர் அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மொட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் அவருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. 
 
மோட்டார் சைக்கிளில் சாலையின் ஓரத்தில் நிறுத்தி செல்போன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென செல்போன் வெடித்து சிதறியது. இதில் சச்சினுக்கு முகம், தாடை, கைகளில் பயங்கரமாக காயம் ஏற்பட்டது. தற்போது சச்சின் திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
மேலும் சச்சின் வைத்திருந்தது ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள செல்போன். இருப்பினும் அந்த செல்போன் எப்படி வெடித்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!...

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments