Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி கைது: சி.பி.ஐ. நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (18:09 IST)
தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான எம்.ஏ.எம். ராமசாமி லஞ்சம் கொடுத்தாக வந்த புகாரின் பேரில் அவர் சி.பி.ஐ. அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டார்.
 
புதிய கம்பெனி தொடங்குவதற்காக கம்பெனிகள் பதிவாளரான மனுநீதி சோழனுக்கு, தொழிலதிபர் ராமசாமி 10 லட்சம் ரூபாய் லஞ்சம் தந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தங்களுக்கு வந்த புகாரையடுத்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் தொழிலதிபர் ராமசாமி மற்றும் மனுநீதி சோழனையும் கைது செய்தனர். அவர்களிடம் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைவேந்தராக இருந்த எம்.ஏ.எம். ராமசாமி, கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments