Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் அப் யுவராஜ் சி.பி.ஐ போலீசாரால் கைது

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2016 (22:14 IST)
கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த யுவராஜ் மீண்டும் சி.பி.ஐ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


 

 
கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டார். இது குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ் உள்பட பலரை கைது செய்தனர். 
 
பின்னர் ஜாமினில் யுவராஜ் விடுதலையானார். இந்நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்யுமாறு தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
 
உச்ச நீதிமன்றம் இன்று யுவராஜ் ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்தது. அதன்படி யுவராஜ் மீண்டும் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரால் சென்னை கீழ்ப்பாக்கத்தில் கைது செய்யப்பட்டார். அவரை அதிகாலை 2 மணிக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரியாணி, சிக்கன் தாங்க.. குழந்தையின் கோரிக்கையை பரிசீலனை செய்யும் கேரள அரசு..!

திடீரென பின்வாங்கிய டிரம்ப்.. மெக்சிகோ மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு..!

டிரம்பை சந்திக்க அமெரிக்கா செல்கிறாரா பிரதமர் மோடி? முக்கிய பேச்சுவார்த்தை..!

ஆதி திராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் கல்விக்கடன்கள் ரத்து..! தமிழக அரசு அறிவிப்பு..!

சேலம் பெரியார் பல்கலையில் புதிய கல்வி கொள்கை அமல்? கொளத்தூர் மணி குற்றச்சாட்டுக்கு பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments