Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.570 கோடி பறிமுதல் குறித்து அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2017 (16:14 IST)
திருப்பூரில் கண்டெய்னர் லாரியில் சிக்கிய ரூ.570 கோடி பணம் குறித்த வழக்கில், பணம் வங்கிக்கு சொந்தமானது என சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.


 

 
2016 தமிழக சட்டசபை தேர்தலின் போது திருப்பூர் அருகே மூன்று கண்டெய்னர் லாரி பணத்துடன் சிக்கியது. அதில் 570 கோடி ரூபாய் பணம் இருந்தது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பணம் யாருக்கு சொந்தமானது என பல கேள்விகள் எழுந்தது.
 
அதைத்தொடர்ந்து அந்த பணம் எஸ்.பி.ஐ வங்கிக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது. இருந்தும் பணத்தை கொண்டு சென்றவர்களிடம் முறையான ஆவணம் இல்லாததால் சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சிபிஐ விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கண்டெய்னரில் இருந்த பணம் வங்கிக்கு சொந்தமானது என தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்! திமுக துரோகம் செய்துவிட்டது! - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

விஜயகாந்த் உயிரோட இருந்தபோது எங்க போனீங்க விஜய்? - பிரேமலதா கேள்வி!

கூட்டணி தலைவர் பழனிசாமிதான்.. ஆனால் முதல்வர்? - செக் வைத்த நயினார் நாகேந்திரன்!

ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவால்! அடுத்த டிஜிபி யார்? - லிஸ்டில் இருக்கும் முக்கிய அதிகாரிகள்!

மனைவியை எரித்து கொலை செய்த கணவர்.. தப்பிக்க முயன்றபோது துப்பாக்கி சூடு.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments