Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷ்ணுபிரியா விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை : முதல்வர் ஜெயலலிதா

விஷ்ணுபிரியா விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை : முதல்வர் ஜெயலலிதா
, செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (12:37 IST)
டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட விஷயத்தில் சிபிசிஐடி விசாரணையே போதும். சிபிஐ விசாரணை தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


 

 
திருச்செங்கோட்டியில் தற்கொலை செய்து கொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியா விவகாரத்தை சிபிசிஐடி விசாரணை செய்தால் உண்மை வெளிவராது. அதானல் சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. விஷ்ணுபிரியாவின் தந்தையும் சிபிஐ விசாரணை வேண்டி கோரிக்கை விடுத்திருந்தார்.
 
இந்நிலையில், சட்டசபையில் இதுபற்றி பேசிய முதல்வர் ஜெயலலிதா, விஷ்ணுபிரியா விவகாரத்தை சிபிசிஐடி போலிசாரே நடுநிலையோடு விசாரணை நடுத்துவர். சிபிஐ விசாரணைக்கு அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil