Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு.. கூட்டணிக்கு மிரட்டலா?

Siva
செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (07:36 IST)
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதிமுகவை கூட்டணிக்கு அழைக்க பயமுறுத்தலா என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக  வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 33 பேரிடம் இருந்து மூன்று கோடி ரூபாய் அவர் வசூலித்ததாக 2021 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதனை தொடர்ந்து, சிபிஐ தற்போது இந்த வழக்கை விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கு பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக இந்த வழக்கை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், திடீரென சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது என்பது அரசியல் விமர்சகர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவை தங்கள் கூட்டணிக்கு அழைக்க பழைய வழக்குகளை பாஜக  பயன்படுத்துவதாக பலர் கூறி வருகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என்பது பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

1+1=0.. விஜய்யும் சீமானும் சேர்ந்தால் ஜீரோ தான்: பத்திரிகையாளர் மணி

அசோக சக்கரவர்த்தியின் வாரிசுகள் பாஜகவுக்கு ஆதரவு.. பீகார் தேர்தலில் திருப்பமா?

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

பூட்டின் சாவியை முதல்வர் ஸ்டாலின் தொலைத்துவிட்டார் போல தெரிகிறது: ஈபிஎஸ் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments