Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஜி வழக்கில் அமலாக்கத்துறையையடுத்து சி.பி.ஐ.யும் மேல்முறையீடு

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (16:30 IST)
2ஜி அலைக்கற்றை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா  மற்றும் கருணாநிதியின் மகளான எம்.பி. கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ள நிலையில் சி.பி.ஐ.யும் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இது திமுகவினருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
 
இந்நிலையில் இந்த வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியோரின் தரப்பின் மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ராசா மற்றும் கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளதாக ஏ.என்.ஐ எனப்படும் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் சிபிஐ தரப்பிலும் இன்று மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments