Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் ஜூலை 2ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம்!

Webdunia
திங்கள், 25 ஜூன் 2018 (19:45 IST)
உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2ஆம் தேதி நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுக்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைமையகம் பெங்களூரில் அமைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2ஆம் தேதி தலைவர் மசூது உசைன் தலைமையில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
மேலும், இதற்காக நான்கு மாநிலங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments