Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதிய பாகுபாடு...? நிற்க வைத்து கொடுமை... தற்கொலைக்கு முயன்ற ஜெயில் வார்டன் !

Webdunia
சனி, 14 நவம்பர் 2020 (12:36 IST)
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சப் ஜெயிலில் பணிவாற்றி வந்த வார்டன் ஒருவர், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திண்டிவனம் நல்லியக்கோடன் பகுதியில் வசித்து வருபவர் பாரதி மணிகண்டன். இவர் திண்டிவபம் சப் ஜெயிலில் வார்டனாகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த வியாழக்கிழமை அந்த ஜெயிலின் சப்ஜெயிலர் இவரை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நின்றுகொண்டே இருக்க வேண்டும் எனக் கூறியதாக தெரிகிறது.

சப்ஜெயிலரின் உத்தரவால் மனவேதனை அடைந்த அவர் ஒரு பிளேடால் தன் கையின் மணிக்கட்டுப் பகுதியை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மேலும் அந்த ஜெயிலில் பணியாற்றிவரும் தன்னை உள்ளிட்ட 4 பேர் மீது சாதி வேறுபாடு காட்டப்படுவதாகவும் இருக்கையில் அமரவிடாமல் நிற்க வைப்பதாகவும் பாரதி மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments