Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப் பதிவு!

Webdunia
திங்கள், 22 மே 2023 (19:59 IST)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சமீபத்தில் ஒரு நபர் கொலைமிரட்டல் விடுத்தார்.  இதுகுறித்து, அக்கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் லல்லன் குமாரின் தொலைபேசிக்கு கடந்த மார்ச் 2 ஆம் ஒரு தேதி அழைப்பு வந்துள்ளது.

அதை எடுத்துப் பேசியபோது, ராகுல் காந்திக்குக் கொலைமிரட்டல் விடுத்த நபர் எதிர்முனையில் பேசியுள்ளார். பின்னர், ’’தான் உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் வசிப்பதாகவும், தன் பெயர் மனோஜ்’’ என்று கூறியதாகத் தெரிகிறது.

இதுதொடர்பாக, லல்லன் குமார், லக்னோவில் உள்ள சின்ஹத் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், மனோஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments