Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.என்.நேரு தொகுதியில் தேர்தல் ரத்தா?

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (16:48 IST)
திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் கேஎன் நேரு மீது தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த தொகுதியில் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் அந்த தொகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
முக் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கேஎன் நேரு ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் உள்பட 5 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என அதிமுக தரப்பிலிருந்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு உள்பட 5 தொகுதிகளில் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் கேஎன் நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் முசிறி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த தொகுதியில் தேர்தல் நடக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ள
 
நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் திடீரென திமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments