Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் லஞ்ச புகாரில் சிக்கிய உதவி ஆணையர் கைது செய்யப்படுவாரா?

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (15:21 IST)
சென்னையில் உதவி கமிஷனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் சிக்கிய கமீல் பாஷா மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்படுவாரா என கேள்வி எழுந்துள்ளது.
 
கடந்த வாரம் 12-ம் தேதி இரவு 10.30 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை குழு, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தின் மேல் உள்ள திருமங்கலம் உதவி ஆணையர் கமீல் பாட்சாவின் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் கணக்கில் வராத பணமாக ரூ.  2.5 லட்சத்தை கைப்பற்றினர். அப்போது, அந்த அறையில் கமீல் பாட்சாவை சந்திப்பதற்காக கொடுங்கையூரை சேர்ந்த பில்டர் செல்வம் என்பவர் வந்திருந்தார். அவரிடமிருந்து ரூ.2.58 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டட்து. எனவே, மொத்தம் ரூ.5.8 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு துறை கைப்பற்றியது.
 
இந்த சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பெரிய அதிர் வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments