Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா வெற்றியை எதிர்த்த வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு

ஜெயலலிதா வெற்றியை எதிர்த்த வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு
, புதன், 2 நவம்பர் 2016 (14:50 IST)
முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதியில் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி, தொடரப்பட்ட வழக்கில், மத்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

 
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில், அந்த தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான பிரவீணா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
 
அதில், தேர்தலின்போது, தான் வாக்கு சேகரிப்பதற்கு சரியான அல்லது சமமான வாய்ப்பு அளிக்கப்படவில்லை; அதிகாரிகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சாதகமாக செயல்பட்டனர் என பிரவீணா குற்றம் சாட்டியிருந்தார்.
 
இந்த வழக்கு நேற்று செவ்வாயன்று நீதிபதி எம். துரைசாமி, அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரவீணா மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாயமான மலேசிய விமானம்: திட்டமிட்டே கடலில் மூழ்கடிக்கப்பட்டது!!