Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உல்லாசம் அனுபவித்து பள்ளி மாணவியை ஏமாற்றிய கல்லூரி மாணவர் மீது வழக்கு

Webdunia
ஞாயிறு, 29 நவம்பர் 2015 (21:19 IST)
திருமணம் செய்துகொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு பள்ளி மாணவியை ஏமாற்றிய கல்லூரி மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

 
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த ஆனந்தூரைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் [வயது 24]. இவர், அரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட்., படித்து வருகிறார்.
 
அதேப் பகுதியைச் சேர்ந்த பிரியா [வயது 16] (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர், ஆனந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பதினோறாம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இவர்கள் இருவரும் கடந்த, இரண்டு ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். பெற்றோர்கள் சம்மதத்துடன், மாணவி தீபிகாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அலெக்ஸ் பாண்டியன் அவருடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். 
 
ஆனால், தற்போது மாணவியை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்துள்ளார். இதுகுறித்து மாணவி, கல்லாவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்துகொண்ட காவல் துறையினர், தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவரை தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

Show comments