Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில்களை திறக்கப் போராட்டம்! – பாஜக அண்ணாமலை மீது வழக்கு!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (11:09 IST)
தமிழகத்தில் கோவில்களை திறக்கக் கோரி போராட்டம் நடத்திய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் கோவில்கள் வார இறுதியான வெள்ளி, சனி, ஞாயிறுக் கிழமைகளில் மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவில்களை வாரம் முழுவதும் திறக்கக் கோரி நேற்று பாஜக சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா விதிகளை மீறி கூட்டம் கூட்டியதாக அண்ணாமலை உள்ளிட்ட 300 பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments