Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

Webdunia
புதன், 7 அக்டோபர் 2015 (14:36 IST)
மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது இந்தூர், லக்னோவில் இரண்டு மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய குற்றச்சாட்டுகளுக்கு  பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்கட்டமைப்பு இல்லாத நிலையில் இரண்டு கல்லூரிக்கு அனுமதி தந்ததாக அன்புமணி மீது சிபிஐ குற்றச்சாட்டியது. இரண்டு மருத்துவ கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது.

இந்நிலையில் மோசடி உள்ளிட்ட பிரிவிகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிபிஐ நீதிமன்றம் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டது, பாமாக-விற்கு பெரும் பின்னடைவாக அமையும் என கருதப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments