Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென தீப்பிடித்த எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இருவர்!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (18:18 IST)
திடீரென தீப்பிடித்த எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இருவர்!
ஆடம்பர கார் ஒன்று கள்ளக்குறிச்சி அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் அந்த காரில் சென்று கொண்டிருந்த இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
 
கள்ளகுறிச்சி மாவட்டம் எடையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரும் அதே ஊரை சேர்ந்த சிவராஜ் என்பவரும் காரில் சென்று கொண்டிருந்தனர் 
 
இந்த நிலையில் அந்த கார் சங்கராபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென முன்பக்கத்தில் புகை வந்தது. இதனையடுத்து காரை ப்ரேக் போட்டு நிறுத்தி சிவராஜ் இறங்கி பார்த்த போது திடீரென கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது
 
இதனையடுத்து இருவரும் காரில் இருந்து இறங்கியதால் உயிர் தப்பினார்கள். இருப்பினும் கார் தீயில் முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

505 வாக்குறுதிகளில் 66 மட்டும்தான் நிறைவேற்றம்.. வெள்ளை அறிக்கை குடுங்க! - அன்புமணி ராமதாஸ்!

1 சவரன் 31 ஆயிரம்தான்..! அறிமுகமாகும் 9 கேரட் தங்கம்! - வாங்கலாமா? என்ன ரிஸ்க்?

போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வடக்கு தொழிலாளர்கள்! - காட்டுப்பள்ளியில் கைது நடவடிக்கை!

சீனா, ரஷ்யாவுடன் மோடி கொஞ்சி குலாவுவது வெட்கக்கேடானது! - அமெரிக்க வெள்ளை மாளிகை ஆவேசம்!

90 சதவீத பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு? எந்தெந்த பொருட்கள்? - இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments