Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவினாசி அருகே கோர விபத்து; தூக்கி வீசப்பட்ட கார்: 5 பேர் பரிதாப பலி!

அவினாசி அருகே கோர விபத்து; தூக்கி வீசப்பட்ட கார்: 5 பேர் பரிதாப பலி!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (10:26 IST)
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே கோர விபத்து ஒன்று நடந்துள்ளது. அரசுப்பேருந்தும் காரும் மோதிக்கொண்டதில் கார் தூக்கி வீசப்பட்டு காரில் இருந்த 5 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.


 
 
ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ஸ்கார்ப்பியோ கார் ஒன்று அவினாசி அருகே தெக்களூர் பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளது. 6 வழிச்சாலையில் அரசுப்பேருந்து ஒன்று அந்த காரின் மீது மோதியதில் கார் பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது.
 
அரசு பேருந்து மோதிய வேகத்தில் பாலத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட கார் பள்ளத்தில் விழுந்ததால் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. காரை இடது புறமாக பேருந்து முந்தி செல்ல முயன்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.
 
இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளதாகவும், காரின் ஓட்டுனர் படுகாயங்களுடன் அவினாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments