Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற கார் விபத்து: 6 பேர் பலி

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (08:12 IST)
நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென விபத்துக்குள்ளானதால் காரில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்
 
நேற்றிரவு நெல்லையில் இருந்து சென்னைக்கு ஒரு கார் சென்றது. கார் திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கார் அந்த பகுதியில் இருந்த ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கார் விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
 
விபத்துக்குள்ளான கார் டாடா சுமோ கார் என்றும், இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேர் பலியான நிலையில் சாலையில் இருந்த 2 பேர் படுகாயமடைந்ததாகவும், காயம் அடைந்த அந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்த்ஹிகள் வெளியாகியுள்ளது
 
இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

2023ஆம் ஆண்டுக்கு பின் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments