Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற கார் விபத்து: 6 பேர் பலி

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (08:12 IST)
நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென விபத்துக்குள்ளானதால் காரில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்
 
நேற்றிரவு நெல்லையில் இருந்து சென்னைக்கு ஒரு கார் சென்றது. கார் திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கார் அந்த பகுதியில் இருந்த ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கார் விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
 
விபத்துக்குள்ளான கார் டாடா சுமோ கார் என்றும், இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேர் பலியான நிலையில் சாலையில் இருந்த 2 பேர் படுகாயமடைந்ததாகவும், காயம் அடைந்த அந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்த்ஹிகள் வெளியாகியுள்ளது
 
இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments