Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் எங்கள விட்டு போய்டீங்களே.. மொட்டை போட்டு துக்கம் அனுசரிக்கும் தேமுதிக நிர்வாகிகள்!

DMDK Members
Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (09:55 IST)
கேப்டன் விஜயக்காந்த் மறவையொட்டி தேமுதிக நிர்வாகிகள் அவரது திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்- அஞ்சலி செலுத்தும் இடத்தில் கட்சி நிர்வாகிகள் மொட்டை போட்டு துக்கத்தை அனுசரித்து வருகின்றனர்


 
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயக்காந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், பலரும் அவருக்கு நேரில் மரியாதை செலுத்தி வருகின்றனர்., மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் அவரது திருஉருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு காலையில் தேமுதிக உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் உசிலம்பட்டி நகர, ஒன்றியம் மற்றும் சேடபட்டி, செல்லம்பட்டி, எழுமலை பேருர் கழக நிர்வாகிகள் கேப்டன் விஜயக்காந்த் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.,

தொடர்ந்து தேமுதிக கட்சி நிர்வாகிகள் ஆறு பேர்  கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தலைமுடி எடுத்து மொட்டை போட்டு துக்கத்தை அனுசரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments