என்னை தோற்கடித்ததற்கு நன்றி – வேட்பாளரின் வித்தியாசமான போஸ்டர் !

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (17:48 IST)
தன்னைத் தோற்கடித்ததற்கு நன்றி தெரிவித்து வேட்பாளர் ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இரு கட்டங்களாக நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டும் பட்டாசுகளை வெடித்தும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.  ஆனால் முதல்முறையாக தோற்ற வேட்பாளர் ஒருவர் தனக்கு வாக்களிக்காத மக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் நடந்துள்ளது.

முருகேசன் என்ற அந்த வேட்பாளர், தனது போஸ்டரில் ‘கோத்துவார்ப்பட்டி 2 ஆவது வார்டு உறுப்பினராக கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட ஆர் முருகேசன் ஆகிய என்னை தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு நீங்க இப்படி செய்வீங்கன்னு கனவுல கூட எதிர்பார்க்கல’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிதாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? அமைச்சர் முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

பாமக தலைவராக அன்புமணி தொடர முடியாது.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

அடுத்த கட்டுரையில்
Show comments