Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூம்புகார் கல்லூரிக்கு விடப்பட்ட விடுமுறை ரத்து- கல்லூரி முதல்வர்

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (14:44 IST)
சீர்காழி அடுத்துள்ள மேலையூரில் இந்து சமய அற  நிலையத்துறைக்குச் சொந்தமான பூம்புகார் அரசுக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இக்கல்லூரியில் அப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தக் கல்லூரியில், குடிநீர், சாலை, கழிப்பறை, உள்ளிட்ட அடிபப்டை வசதிகள் இல்லாததாலும், வகுப்பறை இருக்கைகள், ஆய்வுக்கூடம், உள்ளிட்ட வசதிகள் செய்து தராத கல்லூரி முதல்வர் அறிவொளியை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக  மாணவர்கள் அறிவித்து கல்லூரி வாயிலில்  அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

எனவே  இன்று முதல்( 15,16,17) அடுத்த  மூன்று  நாட்களுக்கு விடுமுறை அறிவித்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், பூம்புகார் அரசுக் கல்லூரிக்கு விடப்பட விடுமுறையை ரத்து செய்து தற்போது கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.

நாளை முதல் வழக்கம்போல் வகுப்புகள் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காவிரி நீரை பெறாமல் குறுவை தொகுப்பை அறிவிப்பதா.! திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!

அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்..! முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்... வைகோ..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.! பாமக சார்பில் சி.அன்புமணி போட்டி..!!

சென்னை மெட்ரோ மேம்பால தூண்களில் விளம்பர பலகை.. வருவாய் ஈட்ட புதிய திட்டம்..!

15 வயது சிறுமி கர்ப்பம்.. 17 வயது சிறுவன் தான் காரணம்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments