Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகை - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் ரத்து: என்ன காரணம்?

Mahendran
வியாழன், 24 அக்டோபர் 2024 (10:53 IST)
தமிழகத்தில் உள்ள நாகை மற்றும் இலங்கையில் உள்ள காங்கேசன்துறை இடையே சமீபத்தில் கப்பல் சேவை தொடங்கப்பட்ட நிலையில் இன்று ஒரு நாள் மட்டும்  நாகை-இலங்கை கப்பல் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வங்கக் கடலில் டானா புயல் உருவாகியுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கப்பல் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வடக்கு அந்தமான் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியுள்ளது. இந்த புயல் தற்போது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில், புயல் காரணமாக கடலில் சீற்றம் மற்றும் சூறைக்காற்று வீசுவதால், கப்பல் இயக்கத்தில் சிரமம் ஏற்படும் என்றும், அதனால் நாகை-இலங்கை கப்பல் சேவை இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டதாக கப்பல் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈழ விடுதலையை இழிவு செய்து படம் எடுப்பதா? ஒற்றை பனைமரத்தை தடை செய்ய வேண்டும்! - சீமான் கண்டனம்!

2 ஆண்டுகளில் 1 கோடி மக்கள் தொகை குறைவு! முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடு?

குறி வெச்சா…? ஹெஸ்புல்லா முக்கிய தலைவர் இஸ்ரேல் தாக்குதலில் பலி!

மனநலம் பாதிக்கப்பட்ட 65-வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் கைது!

மத்திய - மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள திட்டங்கள் ஒடுக்கப்பட்ட சமூக மக்களை முழுவதுமாக சென்று சேரவில்லை - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments