Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ராகுல் காந்தி தாய்லாந்து எதுக்கு போனார்ன்னு சொல்ல முடியுமா?”: ஹெச்.ராஜா நக்கல்!

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2015 (15:16 IST)
"ராகுல்காந்தி 50 நாள் வெளிநாடு போனாரே, எந்த நாட்டுக்கு போனார்ன்னு தெரியுமா, தாய்லாந்துக்கு. அந்தநாடு எதுக்கு பேமஸ்ன்னு ஊருக்கே தெரியும். உல்லாசமாக இருக்க தாய்லாந்து போயிட்டு வந்திருக்கிறார்" என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருச்சி புறநகர் மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
 
இக்கூட்டத்தில் கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு பேசுகையில், "மோடி வெளிநாடு போகிறாரே அவர் எங்கு தூங்குகிறார் என்பது  உள்ளிட்டவற்றை வெளிப்படையாக சொல்கிறோம். ஆனால் ராகுல்காந்தி 50 நாள் வெளிநாடு போனாரே, எந்த நாட்டுக்கு போனார்ன்னு தெரியுமா, தாய்லாந்துக்கு. அந்த நாடு எதுக்கு பேமஸ்ன்னு ஊருக்கே தெரியும். இதை வெளியில் சொன்னால் மக்கள் எதனால் அடிப்பாங்க தெரியுமா? உல்லாசமாக இருக்க தாய்லாந்து போயிட்டு வந்துட்டு தாய்நாட்டு மேல விசுவாசமாக இருப்பதுபோல ராகுல், சோனியா கம்பெனி நடிக்குது.  இதெல்லாம் வேஷம்.”
 
இவ்வாறு ஹெச்.ராஜா பேசினார்.

கள்ளக்காதலை கணவர் ஏற்கவில்லை.. மனவிரக்தியில் கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை..!

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதினான்கு பேர், தங்கம் மற்றும் வெள்ளி,பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

சிறிய அளவு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கருட சேவை: தவறி கீழே விழுந்த குடையால் பரபரப்பு..!

நான் மனிதன் அல்ல! பரமாத்மாவால் பூமிக்கு அனுப்பப்பட்டேன்! – பிரதமர் மோடி!

Show comments