Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாமா.? .! தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு..!!

Senthil Velan
புதன், 1 மே 2024 (12:46 IST)
தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி  அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்க ஆட்சேபனை இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி  ஒரேகட்டமாக மக்களவைத்  தேர்தல் நடந்து முடிந்தது. ஆனாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்னும் அமலில் உள்ளன. அதேநேரத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கும் இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு தினமான ஜூன் 1ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை போக்க அரசியல் கட்சிகள் சார்பில் பல இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து, பொதுமக்களுக்கு இலவசமாக தாகத்தை தணித்து வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் இருக்கும்போது, அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாமா என்ற குழப்பம் ஏற்பட்டது. தண்ணீர் பந்தல் திறக்க சில அரசியல் கட்சிகள் அனுமதி கோரியிருந்தன.
 
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் திறக்க ஆட்சேபனை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: ஜாபர் சாதிக்கிடம் ED விசாரிக்க அனுமதி..! டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!!

தண்ணீர் பந்தல் அமைப்பதன் வாயிலாக எந்தவொரு அரசியல் ரீதியான செயல்பாட்டிலும் ஈடுபடக் கூடாது என்றும் தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் பந்தல் சரியான முறையில் செயல்படுகிறதா என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனத் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

இந்தில எங்க இருக்கு.. இங்கிலீஷ்லதானே இருக்கு! – குற்றவியல் சட்ட வழக்கில் மத்திய அரசின் குழப்ப விளக்கம்!

மீண்டும் ரூ.54,000ஐ கடந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 520 ரூபாய் உயர்வு..!

கேரளாவில் பிறந்தாலும் வாழ வெச்சது நீங்கதான்! தமிழ்நாட்டுக்கு நல்லதே செய்வேன்! – பாஜக எம்.பி சுரேஷ் கோபி!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் இறந்த பாம்பு! அங்கன்வாடி மையத்தில் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments