அதிக வாக்குகள் பெற்று தந்தால் இன்னோவா கார், தங்கச்சங்கிலி பரிசு: சி விஜயபாஸ்கர் அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (18:43 IST)
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு அதிக வாக்குகள் பெற்று தரும் நகர செயலாளருக்கு இன்னோவா கார், வட்டச் செயலாளருக்கு ஐந்து பவுன் தங்கச்சங்கிலி பரிசாக வழங்கப்படும் என முன்னாள் அதிமுக அமைச்சர் சி விஜயபாஸ்கர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக கருப்பையா பன்னீர்செல்வம் என்பவர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மதிமுக சார்பில் துரை வையாபுரி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இங்கு அதிமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில் இங்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், திருச்சி நகர அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார்

அப்போது திருச்சி தொகுதியில் அதிக வாக்குகளை பெற்று, அதிமுகவை வெற்றி பெறச் செய்யும் நகர செயலாளருக்கு இன்னோவா கார் பரிசு தரப்படும் என்றும் வட்ட செயலாளருக்கு ஐந்து பவுன் தங்க சங்கிலி வழங்குவேன் என்றும் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கட்சிகளின் செய்தியாளர் சந்திப்பு.. ஆனால் தேஜஸ்வி படம் மட்டும்.. பாஜக கிண்டல்..!

மலேசியா மாநாட்டில் மோடி கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்: காங்கிரஸ் விமர்சனம்..!

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று எந்த திசை நோக்கி நகரும்?

கூகுள் கண்டுபிடித்த புதிய அல்காரிதம்.. Material Science துறைகளில் புரட்சி.. 13000 மடங்கு அதிவேகம்..!

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்க முடிவு! இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!

அடுத்த கட்டுரையில்
Show comments