Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக வாக்குகள் பெற்று தந்தால் இன்னோவா கார், தங்கச்சங்கிலி பரிசு: சி விஜயபாஸ்கர் அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (18:43 IST)
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு அதிக வாக்குகள் பெற்று தரும் நகர செயலாளருக்கு இன்னோவா கார், வட்டச் செயலாளருக்கு ஐந்து பவுன் தங்கச்சங்கிலி பரிசாக வழங்கப்படும் என முன்னாள் அதிமுக அமைச்சர் சி விஜயபாஸ்கர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக கருப்பையா பன்னீர்செல்வம் என்பவர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மதிமுக சார்பில் துரை வையாபுரி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இங்கு அதிமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில் இங்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், திருச்சி நகர அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார்

அப்போது திருச்சி தொகுதியில் அதிக வாக்குகளை பெற்று, அதிமுகவை வெற்றி பெறச் செய்யும் நகர செயலாளருக்கு இன்னோவா கார் பரிசு தரப்படும் என்றும் வட்ட செயலாளருக்கு ஐந்து பவுன் தங்க சங்கிலி வழங்குவேன் என்றும் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments